வெள்ளி, 8 ஏப்ரல், 2011

ஓட்டுப் பொருக்கிகள் வர்ராங்க! மக்களே உஷார்!

ஈழத்தின் சுடுகாடுகளில்
பிணம் சுவைத்த பிணந்திண்ணிகளே!
தமிழ் இனத்தின் குருதிச்சேற்றில்
ஊறித்திளைத்த பன்றிகளே!

காங்கிரசோடு கைகோர்த்து தமிழரை
கருவருத்த துரோகிகளே! கயவர்களே!
மனைவிகள், ஏர்கூலர் சகிதம்
அரைநாள் உண்ணாவிரதம்..

தண்டவாளத்தில் தலைவைத்த வீரர்(!)
ஏர்கூலரில் தலை வைக்க கூடாதோ?
போராட்டத்தின் பரிமாணம் இது(!)
கழுதை வளர்ந்த கதை!

மாபெரும் எதிர்கட்சி வீராங்கணைக்கு
தமிழனோட நெனப்பே வரல..
சொத்து குவிப்பு வழக்கு, கொடநாடு எஸ்டேட்டு..
இதுக்கே நேரம் போதலை..

ஓட்டுப் பொருக்க மட்டும்
உங்களுக்குள்ள போட்டா போட்டி..

காவிரியில் தண்ணி வருமா?
பாலாற்று நீரும் பறிபோகுமோ?
முல்லை பெரியாறு என்னாகும்?
எங்கே, எப்போது தமிழனுக்கு நீதி?

மீனவர்களின் உடல் துளைத்த
ரவைகளே சோர்ந்து போகும்..
ஈனர்களே என் மீனவனுக்கு
உன் பதில் என்ன?

தமிழர் நலனுக்காக ஒன்றுபடாத
ஓட்டுப்பொருக்கிகள் - ஜனநாயகத்தை
காப்பாத்தனும்-னு ஒன்றுபட்டு
ஓட்டுபோடுன்னு ஊளையிடுறாங்க..

ஈழத்தின் அழுகுரல் கேட்காத
ஈனர்கள் நம்மிடையே ஓட்டு
கேட்கிறார்கள்
துரத்தி அடியுங்கள் தமிழர்களே!

வெட்கக்கேடு! வெட்கக்கேடு!!
தமிழா இது மாபெரும் வெட்கக்கேடு!
துரத்தி அடிப்போம் ஓட்டுப்பொருக்கிகளை
தூக்கி நிறுத்துவோம் இழந்த நம் தன்மானத்தை

தமிழர் உரிமை காக்க
எந்த ஓட்டுக் கட்சியும் இல்லை..
போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
தமிழ் ஈழம் மட்டுமல்ல..
தனி தமிழகமும் மலரும்.


தேர்தலை புறக்கணிப்போம்!
தேர்தலை புறக்கணிப்போம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக